Media Mirchi

Saturday, November 22, 2008

On Advani-Manmohan Singh chat on Malegaon blast 'Sadhvi'

நல்லதொரு நிகழ்வு நடந்திருக்கிறது...!
எதிர்க் கட்சித் தலைவர் என்ன சொன்னாலும் அதை அரசியலாக பார்க்காமல், மதிப்பு தந்து, அதற்கான விளக்கமும் தர முயற்சித்த பிரதமர் பாராட்டுக்குரியவர்.

இது சம்பந்தமான அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை மீடியா புறக்கணித்தால் நல்லது என்று அட்வைஸ் செய்ய கிளம்பினால் .....
அது விழலுக்கு இறைத்த நீர் !.....

இதற்குப் பிறகும், அத்வானி, சனிக்கிழமையன்று, மும்பை ATS -ஐ, ஒரு பிடி பிடித்திருக்கிறார் என்றால், அவரிடம் காட்டப்பட்ட தகவல்கள் அவருக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

Thursday, November 20, 2008

அதே Praveen Samy யின் 14-ம பக்க கட்டுரை (The Hindu) 20-11-08

பாவம் Praveen Swamy ! நல்ல மனிதர் போலிருக்கிறது ! உண்மையை எழுதிவிட்டார்.
'Dead man's tale holds key to Hindutva terror secrets' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், 'Little to go on' எனும் குறுந்தலைப்பில் என்ன எழுதியிருக்கிறார் ?.....
" So far, the Maharastra Police have been UNABLE to secure the arrest of either Mr. Chatterjee or Kalsangram. Barring the solo witness's testimony, therefore, investigators have little to go on."
அதே போல, கடைசி பேராவில் என்ன சொல்கிறார் என்றால் .....
" So far, though, they have been unable to locate either the explosives or devices used in the attacks or the actual perpetrators."
ஒண்ணுமே இல்லாமல் உரத்து கூவிக்கொண்டிருக்கிறது Mumbai ATS என்பதற்கு இதுவே உதாரணம் !
அதனால்தான் அது 14-ம பக்கத்திற்கு தள்ளப் பட்டுவிட்டதோ, The Hindu-வினால் ?.....

முதல் பக்க Praveen Samy கட்டுரை (The Hindu) 20-11-08

Praveen Samy என்பவர் 'Politics helped Hindutva Terrorists' என்று ஒரு யூகமான கட்டுரையைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்கே, அவருடைய கட்டுரை முதல் பக்கத்தில் வந்தது ஆச்சரியமாக இருக்கக் கூடும். மத்ய பிரதேஷில் தேர்தலுக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் இக் கட்டுரைக்கு The Hindu முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. மத்ய பிரதேஷ் முதல்வராக வாய்ப்பு உள்ள திக் விஜய் சிங் சொல்லியதாக ஒரு யூகக் கட்டுரையை இப்போது வெளியிடுவதற்கான அவசியம் என்ன என்பது உள்ளங்கை நெல்லிக் கனி !.....
திக் விஜய் சிங், இந்த விஷயத்தை பல வருடங்களாக 'ஹிந்து தீவிரவாதம்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் சொல்வதில் அவருக்கே நம்பிக்கையிருந்தால், குஜராத் வழக்கு மாதிரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்து, போலீஸ் துப்பறிதலை நீதிமன்ற பார்வை கீழ் நடத்த முயன்று இருக்கலாம். இல்லாவிடில் ஹிந்து ராம் கூட அதை செய்திருக்கலாம். என் செய்யவில்லை ?.....

முதலில் 'Ugly defence of the indefensible' எனும் தலையங்கம்

தலையங்கத்தில் உள்ள BJP, Sangh Parivaar, Advani என்கிற வார்த்தைகளுக்கு பதிலாக Samajwadi, so called Secularists, Amar Singh என்பவற்றை பொருத்திவிட்டு, 'malegaon' என்பதற்கு பதிலாக, 'Delhi Bomb blast' என்று திருத்திவிட்டு, 'Sadhvi, Lt. Col. Shrikant Purohit" என்பவற்றுக்கு பதிலாக சில இஸ்லாமிய பெயர்களை எழுதிவிட்டால், மேற்படி தலையங்கம் டெல்லி குண்டு வெடிப்புக்கும் பொருந்தும்.
டெல்லி குண்டு வெடிப்பின்போது , பலரும்(அமர் சிங் உட்பட) 'தவறான ஆட்கள் கைது செய்யப்படுகிறார்கள்' என்று கூறியபோது, The Hindu அதை இதே அளவுக்கு கடுமையாக கண்டித்ததா ?.....
இல்லையெனில், ஏன் இந்த பாரபட்சம் ?.....

டெல்லி குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் மட்டும்தான், தீர்ப்பு வரும் வரை அப்பாவிகளா ?..... மலேகான் குண்டுக்கு காரணமானவர்களை Mumbai ATS கைது செய்துவிட்டாலே அவர்களை கழுவில் ஏற்றிவிட வேண்டுமா ?....
நியாயங்கள் எல்லோருக்கும் பொதுவானவை.
பத்திரிகை தர்மமும் அப்படிதான்.

The Hindu - வின் 'காவி கசப்பு'

The Hindu - வின் 'காவி கசப்பு' என்பது எல்லோரும் அறிந்ததே !
இருப்பினும் சில நியாயமான விஷயங்களையாவது, அப்படியே எழுதினால் பத்திரிகை தர்மமாக இருக்கும்.

20-11-08 அன்று மலேகான் குண்டு வெடிப்பு பற்றி, The Hindu இரண்டு செய்திகள் மற்றும் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அவை பற்றி ...

தனித்தனியாக விமர்சனங்கள் - அடுத்தடுத்து !.....

Friday, November 14, 2008

குண்டு வெடிப்பு - குறுக்கு வழியில் போலீஸ் ?

மாலேகான் குண்டு வெடிப்பு போலீஸ் விசாரணை 'லீக்' விஷயங்கள் , போலீஸ்க்கு திருப்தி அளிக்கும் வகையில் பத்திரிக்கைகள் மற்றும் டிவி க்கள் துணையோடு சென்று kondirukkindrana.
இந்த பிரச்சாரம் மாநில தேர்தல்கள் முடிந்த பிறகும் தொடரலாம் - மாநில தேர்தல் முடிவுகளைப் பொறுத்து !
மும்பை போலீஸ் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வந்தால், நாடாளுமன்ற தேர்தல் வரை 'லீக்' தொடரும்.
-------------------------------------------------------------------------------------------
பல கேஸ்களில் போலீஸ் அசடு வழிவதற்கு காரணம் என்ன என்பது பற்றி ...
இன்னொரு நாள் பேசுவோம்.

கங்குலியின் கடைசி டெஸ்ட்

இந்தியாவில் ஒரு சாபக்கேடு. நேர்மையாக, ஊழல் பண்ணாமல் இருந்தால் மட்டும் நீங்கள் நல்லவராகிவிட முடியாது.
பல நேரங்களில் பலவற்றுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போனால் ... நீங்கள் நல்லவர் !...
அதே சமயம் சட்டத்தையும் விதிகளையும் கடுமையாக கடைபிடிக்கிறவர்களாக இருந்தால், உங்களுக்கு உங்கள் வீட்டில் இருப்பவர்களே ஓட்டுபோடமாட்டார்கள்.
கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
கங்குலி தலைப்பில் இதை எதுக்காக சொல்கிறேன் என்றால்
அவரும் அப்படிதான் .....!
சர்தார் படேலை விட நேருவுக்கு அதிக மவுசு.
அத்வானியை விட வாஜ்பாயி.
அதே போல கங்குலியை விட Sachin, Dravid, Lakshman & Kumble.
வழ வழ kozha kozhaakkalukku இருக்கிற mariyaadhai, கொஞ்சம் strong aaga iruppavargalukku indhiyaavil mariyaathai kidaiyaathu.
sogamthaan !.....